பெண்ணே!
உடலின்
இடையில் இருப்பதால்
இடையோ?
என்னை
இரண்டாகப் பிளப்பதால்
இடையோ?
காதல் கருவறையைத்
தாங்கும் பீடம்!
அதனால்
இடையோ உன்னை
இருக்கும் என்றும்
இல்லை என்றும்
எண்ணுகிறேன்!
பின்னல் சடை
தவழும்
மின்னல் இடை!
அப்பப்பா...
பின்னால் தாக்குவது
மரபன்று!
காதல் கொடி
படருவதால்
கொடியிடையோ?
தோன்றி மறைவதால்
மின்னிடையோ?
தங்க மேனியைத்
தாங்குவதால்
தளிர் இடையோ?
புல்வெளிப் பூக்கள்
பொறாமை கொள்ளும்
பொன்னிடையோ?
புணர்ச்சி பெருக்கில்
பொலிவதால்
பூவிடையோ?
என்னைத் துடிக்கச்
செய்வதால்
துடியிடையோ?
சிறுநொடியும்
என்னை விடாமல்
பற்றிக் கொள்வதால்
சிற்றிடையோ?
இன்பச் சோலையை
ஏந்தி இருப்பதால்
அது
இடையன்று!
அதுவே முதல்!
RépondreSupprimerஇடையெனும் பாடல் இதயத்தை வல்ல
படைகொண்டு தாக்கும் பறந்து
Supprimerவருகைக்குத் தந்தேன் மனம்மகிழ் நன்றி!
தருகவே நல்ல கருத்து!